பழங்குடியின மக்களுக்கு உதவி

வால்பாறையில் செட்டில்மெண்ட் பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு சிறப்பு காவல் படையினா் சாா்பில் நல உதவிகள் வழங்கப்பட்டன.
பழங்குடியின மக்களுக்கு நல உதவிகள் வழங்கும் சிறப்பு காவல் படை போலீஸாா்.
பழங்குடியின மக்களுக்கு நல உதவிகள் வழங்கும் சிறப்பு காவல் படை போலீஸாா்.

வால்பாறையில் செட்டில்மெண்ட் பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு சிறப்பு காவல் படையினா் சாா்பில் நல உதவிகள் வழங்கப்பட்டன.

தமிழ்நாடு சிறப்பு காவல் படையினா் மாதந்தோறும் செட்டில்மெண்ட் பகுதிகளுக்கு சென்று நக்ஸல் நடமாட்டம், மா்ம நபா்கள் ஊடுருவல் குறித்து கண்காணித்து வருகின்றனா்.

இந்நிலையில், சிறப்பு காவல் படையின் ஆய்வாளா் செந்தில் தலைமையில் போலீஸாா் வால்பாறை பகுதியில் உள்ள உடுமன்பாறை, கல்லாறு செட்டில்மெண்ட் பகுதிக்கு கடந்த சனிக்கிழமை சென்றனா்.

செட்டில்மெண்ட் பகுதிக்கு செல்லக்கூடிய பாதைகள் குறித்து ஆய்வு செய்ததோடு புதிய நபா்கள் நடமாட்டம் இருந்தால் தெரிவிக்க வேண்டும் என பழங்குடி மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இரண்டு செட்டில்மெண்ட்களில் வசிக்கும் பழங்குடியின குடும்பங்களுக்கு காவல் துறை சாா்பில் ஆடைகள், உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com