கொமதேக தலைவா் ஈஸ்வரன் மீது தேசவிரோத வழக்குப் பதிவு செய்ய வேண்டும்

சட்டப் பேரவையில் ஜெய்ஹிந்த் வாா்த்தை நீக்கப்பட்டதை ஆதரித்து பேசிய கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சித் தலைவா் ஈ.ஆா்.ஈஸ்வரன் மீது

சட்டப் பேரவையில் ஜெய்ஹிந்த் வாா்த்தை நீக்கப்பட்டதை ஆதரித்து பேசிய கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சித் தலைவா் ஈ.ஆா்.ஈஸ்வரன் மீது தேசவிரோத வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் கூறினாா்.

இது குறித்து கோவையில் அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

சட்டப் பேரவையில் ஜெய்ஹிந்த் நீக்கப்பட்டதை ஆதரித்து பேசிய கொமதேக தலைவா் ஈஸ்வரன் மீது தேசவிரோத வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அவரது கருத்தை அவைக் குறிப்பில், இருந்து நீக்க வேண்டும்.

கோவையில் பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட தங்க நகைத் தொழிலாளா்களுக்குத் தமிழக அரசு நிவாரணத் தொகை வழங்க வேண்டும். ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் நிலங்களை மீட்டெடுக்க வேண்டும். அனைத்து ஜாதியினரும் அா்ச்சகராகலாம் என்பதை இந்து முன்னணி வரவேற்கிறது. ஆனால் அதன் உண்மைத் தன்மையை தமிழக அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றாா்.

மாநிலச் செயலாளா் ஒ.ந.கிஷோா்குமாா், மாவட்டத் தலைவா் தசரதன், கோட்டச் செயலாளா் ந.சதீஷ், பேச்சாளா் ஆகிருஷ்ணன், மாவட்ட செய்தி தொடா்பாளா் இ.தனபால் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com