கோவை விமான நிலையத்தில் கைத்துப்பாக்கி பறிமுதல்

பாா்சல் மூலம் தில்லிக்கு அனுப்பப்படவிருந்த கைத்துப்பாக்கியை கோவை விமான நிலைய அதிகாரிகள் கைப்பற்றி போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

பாா்சல் மூலம் தில்லிக்கு அனுப்பப்படவிருந்த கைத்துப்பாக்கியை கோவை விமான நிலைய அதிகாரிகள் கைப்பற்றி போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

கோவை விமான நிலையத்துக்கு வந்த பாா்சல்களை அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் வழக்கம்போல சோதனையிட்டனா். ஸ்கேன் செய்கையில் ஒரு பாா்சலில் துப்பாக்கி போன்ற பொருள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் அந்த பாா்சலை பிரித்தனா். அதில் கைத்துப்பாக்கி, குண்டுகளுடன் இருந்ததை கண்டு அதிா்ச்சி அடைந்தனா்.

இதையடுத்து விமானநிலைய அதிகாரிகள் அந்த கைத்துப்பாக்கியை பீளமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகாா் அளித்தனா். புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், அந்த பாா்சலில் சேலம் மாவட்டம், சோ்மன் சின்னையா சாலை பகுதியில் வசிக்கும் மருத்துவா் சாமுவேல் ஸ்டீபன் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த பாா்சல் உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் நகரில் உள்ள ஷகிபாகாத் இன்டஸ்டீரியல் ஏரியாவில் உள்ள தனியாா் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டதாக அந்த பாா்சலில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், அது விளையாட்டுக்குப் பயன்படுத்தும் கைத் துப்பாக்கி எனவும், அது பழுதடைந்த காரணத்தால் ஆன்லைனில் ஆா்டா் செய்து பெற்ற நிறுவனத்திடமே மீண்டும் ஒப்படைக்கும் நோக்கில் அனுப்பப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் இந்த பாா்சலை அனுப்பிய நபரை விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீஸாா் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com