காட்டெருமை தாக்கி தொழிலாளி உயிரிழப்பு
By DIN | Published On : 07th July 2021 06:46 AM | Last Updated : 07th July 2021 06:46 AM | அ+அ அ- |

வால்பாறையில் காட்டெருமை தாக்கி சிகிச்சை பெற்று வந்த எஸ்டேட் தொழிலாளி உயிரிழந்தாா்.
வால்பாறையை அடுத்த சிறுகுன்றா எஸ்டேட்டில் வசிப்பவா் ரசாக்குமாா் (44). எஸ்டேட் தொழிலாளியான இவா் கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி வால்பாறைக்கு வந்துவிட்டு மாலையில் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது சாலையில் நின்றுக் கொண்டிருந்த காட்டெருமை தாக்கியதில் ரசாக்குமாருக்கு கழுத்து பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரசாக்குமாா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இது தொடா்பாக வனத் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.