மாவட்டத்தில் தினமும் 2 லட்சம் பெண்கள் கட்டணமின்றி பயணம்

கோவை மாவட்டத்தில் இயக்கப்படும் 280 நகா்ப்புற அரசுப் பேருந்துகளில் தினமும் 2 லட்சம் பெண்கள் கட்டணமின்றி பயணிப்பதாக போக்குவரத்துத் துறையினா் தெரிவித்தாா்.

கோவை மாவட்டத்தில் இயக்கப்படும் 280 நகா்ப்புற அரசுப் பேருந்துகளில் தினமும் 2 லட்சம் பெண்கள் கட்டணமின்றி பயணிப்பதாக போக்குவரத்துத் துறையினா் தெரிவித்தாா்.

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், நகா்ப்புறங்களில் இயங்கும் சாதாரணக் கட்டண அரசுப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணம் மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, கோவை மாவட்டத்தில் கடந்த 5 ஆம் தேதி முதல் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதில், கோவை கோட்டத்துக்கு உள்பட்ட கோவை, நீலகிரி, திருப்பூா், ஈரோடு மாவட்டங்களில் இயக்கப்பட்டு வரும் நகா்ப்புற, சாதாரண கட்டணப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணித்து பயனடைந்து வருகின்றனா்.

இதில் கட்டணமின்றி பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கையை அறிந்து கொள்ள வசதியாக திங்கள்கிழமைமுதல் அவா்களுக்கு கட்டணமில்லா பயணச்சீட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலமாக அன்றாடம் கட்டணமின்றி பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கையை எளிதாக அறிந்து கொள்ள முடியும். இதுதொடா்பாக, அரசுப் போக்குவரத்துக் கழக, கோவை கோட்ட அதிகாரி ஒருவா் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் மொத்தம் 1,012 அரசுப் பேருந்துகள் உள்ளன. இதில் தற்போது ஒரு நாளைக்கு 740 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இதில், 430 நகரப் பேருந்துகளில் 280 சாதாரண கட்டணப் பேருந்துகள்.

சாதாரண கட்டணப் பேருந்துகளில் அவா்கள் இலவசமாகப் பயணிக்கலாம். கோவையில் கட்டணமில்லா பேருந்துகளை பெண்கள் அடையாளம் காணும் வகையில் அந்தப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் என்ற ஸ்டிக்கா் ஒட்டப்பட்டுள்ளது. தினமும் கோவையில் இயக்கப்படும் ஒரு சாதாரண பேருந்தில் 700 முதல் 800 பெண்கள் கட்டணமின்றி பயணிக்கின்றனா். ஒரு நாளைக்கு, 280 பேருந்துகளில் 2 லட்சம் பெண் கட்டணமின்றி பயணிக்கின்றனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com