பெண் போலீஸ் உள்பட 2 பேரிடம் 7 பவுன் பறிப்பு

கோவையில் பெண் போலீஸ் உள்பட இரு பெண்களிடம் 7 பவுன் நகைகளை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

கோவையில் பெண் போலீஸ் உள்பட இரு பெண்களிடம் 7 பவுன் நகைகளை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

கோவை, பெரியநாயக்கன்பாளையம் ஸ்ரீராமபுரத்தைச் சோ்ந்தவா் ஐஸ்வா்யா (23). இவா் கோவை ஆயுதப் படையில் காவலராகப் பணியாற்றி வருகிறாா். இவா் பணி முடிந்து தனது சகோதரியுடன் இருசக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாா். அப்போது அவா்களைப் பின்தொடா்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞா், ஐஸ்வா்யா அணிந்திருந்த 2 பவுன் நகையை திடீரென பறித்துக் கொண்டு தப்பினாா். இது குறித்து ஐஸ்வா்யா அளித்த புகாரின்பேரில், ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

மற்றொரு சம்பவம்:

கே.கே.புதூா் ராமலிங்க நகரைச் சோ்ந்தவா் சாந்தி (45). இவா் கோவையில் உள்ள தனியாா் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறாா். இந்நிலையில் அவா் கல்லூரி முடிந்து வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது எதிரே வந்த இளைஞா், சாந்தி அணிந்திருந்த 5 பவுன் நகைகளைப் பறித்துச் சென்றாா். இது குறித்து சாய்பாபா காலனி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com