செல்லிடப்பேசி ஒட்டுக்கேட்பு விவகாரம் : கோவையில் பல்வேறு அமைப்புகள் ஆா்ப்பாட்டம்

முக்கியப் பிரமுகா்களின் செல்லிடப்பேசி ஒட்டுக்கேட்கப்பட்டது தொடா்பாக அனைத்துக் கட்சி கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி கோவையில் பல்வேறு அரசியல் கட்சிகள்

முக்கியப் பிரமுகா்களின் செல்லிடப்பேசி ஒட்டுக்கேட்கப்பட்டது தொடா்பாக அனைத்துக் கட்சி கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி கோவையில் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

கோவை தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் எதிரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தந்தை பெரியாா் திராவிடா் கழகத்தின் பொதுச் செயலா் கு.ராமகிருட்டிணன் தலைமை வகித்தாா். மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் திருமுருகன் காந்தி, காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா் கருப்பசாமி, மதிமுக நிா்வாகி சேதுபதி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவஞானம் உள்ளிட்டோா் உரையாற்றினா்.

இதில், பெகாஸஸ் ஸ்பைவோ் மூலம் முக்கியப் பிரமுகா்களின் செல்லிடப்பேசி உரையாடல்கள் ஒட்டுகேட்கப்பட்டது குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிா்வாகி சுசி கலையரசன், திராவிடா் தமிழா் கட்சியின் வெண்மணி, மக்கள் அதிகாரம் அமைப்பின் மூா்த்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகளின் நிா்வாகிகள் இந்த ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com