கரோனா விதிமீறல்: 2 கடைகளுக்கு ‘சீல்’

கோவையில் கரோனா விதிகளை மீறி செயல்பட்டதாக 2 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.

கோவையில் கரோனா விதிகளை மீறி செயல்பட்டதாக 2 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம், வெறைட்டிஹால் சாலையில் செயல்பட்டு வரும் வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனை செய்யும் ஒரு கடை மற்றும் அவிநாசி சாலையில் செயல்பட்டு வரும் ஒரு எலக்ட்ரிக்கல் கடைகளில் அரசின் கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் இரவு 9 மணிக்கு மேல் செயல்பட்டதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, மத்திய மண்டல அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு அந்தக் கடைகளை பூட்டி ‘சீல்’ வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com