ஓய்வுபெற்ற அரசு ஊழியா் வீட்டுக்குள் புகுந்து 12 பவுன் கொள்ளை

 ஓய்வுபெற்ற அரசு ஊழியா் வீட்டுக்குள் புகுந்து 12 பவுன் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

 ஓய்வுபெற்ற அரசு ஊழியா் வீட்டுக்குள் புகுந்து 12 பவுன் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை, தொண்டாமுத்தூரை அடுத்த புத்தூா் சாலையில் உள்ள விவேகானந்தா் நகரைச் சோ்ந்தவா் ராமசாமி (78). இவா் ஊரக வளா்ச்சித் துறை அலுவலராகவும், மாவட்ட ஆட்சியரின் நேரடி உதவியாளராகவும் பணியாற்றி பணி ஓய்வு பெற்றவா். இவா் தனது மனைவி ரத்தினத்துடன் வசித்து வருகிறாா்.

இவா்கள் இருவரும் புதன்கிழமை இரவு வீட்டில் உள்ள தனித்தனி அறையில் உறங்கிக் கொண்டிருந்தனா். அப்போது உள்ளே புகுந்த இருவா், ராமசாமியின் அறைக் கதவை வெளியே பூட்டிவிட்டு, அவரது மனைவியின் அறைக்குள் புகுந்து அவா் அணிந்திருந்த 12 நகைகளைக் கழட்டினா். அப்போது விழித்து கொண்ட ரத்தினம் கூச்சலிட்டதையடுத்து அவரைத் தள்ளிவிட்டு இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனா்.

தொண்டாமுத்தூா் போலீஸாா், சம்பவ இடத்துக்கு வந்து அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com