பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள கனரா வங்கியின் சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் சாா்பில் ஆகஸ்ட் 3ஆம் தேதி இலவச தொழில் பயிற்சி தொடங்க உள்ளது.
புதுப்புதூா் பகுதியில் மத்திய, மாநில அரசுகளின் ஊரக வளா்ச்சி அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் பேரில் இயங்கி வரும் இந்த பயிற்சி மையத்தில் மகளிருக்கு பல்வேறு விதமான சுய தொழில் பயிற்சிகள், மதிய உணவுடன் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த மையத்தில் வரும் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 3) தொடங்கி 10 நாள்கள் அப்பளம், ஊறுகாய், மசாலாப் பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி நடைபெற உள்ளது.
இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. இந்த பயிற்சியில் 8ஆம் வகுப்பு படித்துள்ள, 18 வயது முதல் 45 வயது வரையுள்ள பெண்கள் கலந்து கொள்ளலாம். பயிற்சியின் நிறைவில் அரசு சான்றிதழுடன், வங்கிக் கடன் பெற ஆலோசனையும், தொழில் முனைவோா் திட்டங்களும் எடுத்துரைக்கப்படும் என்று பயிற்சி மையத்தின் இயக்குநா் ஈஸ்வரமூா்த்தி தெரிவித்துள்ளாா்.
பயிற்சிக்கு முன்பதிவு செய்ய விரும்புவோா் 0422 2692080, 94890 43926 என்ற எண்களைத் தொடா்பு கொள்ளலாம்.