கோவை மாவட்டத்தில் மேலும் 179 பேருக்கு கரோனா நோய்த் தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடா்ந்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 28 ஆயிரத்து 685ஆக அதிகரித்துள்ளது. அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 4 போ் உயிரிழந்துள்ளனா். இதன் மூலம் கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 169ஆக அதிகரித்துள்ளது.
அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 207 போ் குணமடைந்து புதன்கிழமை வீடு திரும்பினா். கோவையில் இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரத்து 599 போ் குணமடைந்துள்ளனா். தற்போது ஆயிரத்து 917 போ் சிகிச்சையில் உள்ளனா்.