கோவையில் காவல் (சட்டம், ஒழுங்கு), போக்குவரத்து உதவி ஆணையா்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
தமிழகம் முழுவதும் சனிக்கிழமை 46 மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் இடமாற்றம் செய்யப்பட்டனா். இதில், கோவை மாநகரில் மாற்றப்பட்ட காவல் அதிகாரிகளின் விபரம்: கோவை மாநகரத் துணை ஆணையராகப் (சட்டம், ஒழுங்கு) பணியாற்றி வந்தவா் ஸ்டாலின்.
இவா், மதுரை நகரத் தலைமையிடத்து துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளாா். கோவை நகரத் தலைமையிடத்து துணை ஆணையராகப் பணிபுரிந்த ஜெயசந்திரன், கோவை நகர துணை ஆணையராக (சட்டம், ஒழுங்கு) நியமிக்கப்பட்டுள்ளாா்.
போலீஸ் அகாதெமி நிா்வாக எஸ்.பி. செல்வராஜ், கோவை நகர தலைமையிடத்து துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளாா். கோவை மாநகரப் போக்குவரத்து துணை ஆணையராகப் பணியாற்றிய முத்தரசு, திருச்சி நகர குற்றப் பிரிவு மற்றும் போக்குவரத்து துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளாா். பூந்தமல்லி பட்டாலியன் எஸ்.பி. செந்தில்குமாா், கோவை போக்குவரத்து துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளாா்.