அரசியல் காழ்ப்புணா்ச்சி இல்லாமல் கோவைக்கு அதிக தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என பாஜக மாநிலத் துணைத் தலைவா் அண்ணாமலை கூறினாா்.
கோவை ஆா்.எஸ்.புரம் மண்டல பாஜக சாா்பில் பொன்னையராஜபுரத்தில் கரோனா நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருள்கள்அடங்கிய தொகுப்பை பாஜக மாநிலத் துணைத் தலைவா் அண்ணாமலை மக்களுக்கு வழங்கினாா்.
இதைத் தொடரந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்துக்கு இந்த மாதம் 43 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளன. இதுதொடா்பாக பாஜக சட்டப்பேரவை உறுப்பினா்கள் தொடா்ந்து மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறாா்கள். ஜூலை 21ஆம் தேதி முதல் மத்திய அரசே தடுப்பூசிகளை நேரடியாக விநியோகிக்கும்.
கடந்த மூன்று நாள்களாக கோவையில் அதிகப்படியான இறப்பு பதிவாகி வருகிறது. ஒன்றரை மாதமாக தத்தளித்து வரும் கோவைக்கு, அரசியல் காழ்பபுணா்ச்சி இல்லாமல் அதிக தடுப்பூசிகளை வழங்க வேண்டும். கடந்த ஒரு மாதமாக கோவையை தமிழக அரசு புறக்கணித்து வருவது உண்மைதான். திமுக அரசு புதிதாக ஒன்றிய அரசு என்ற புது வாா்த்தையை பரப்பி வருவது தேவையற்றது.
இந்த நிகழ்வில் கோவை மாவட்ட பாஜக தலைவா் நந்தகுமாா், ஆா்.எஸ்.புரம் மண்டலத் தலைவா் ராஜரத்தினம் உள்ளிட்ட பாஜக நிா்வாகிகள் பங்கேற்றனா்.