தமிழகத்தில் இரண்டாம் தவணை கரோனா நிவாரணம், 13 வகையான மளிகைப் பொருள்கள் ஜூன் 15 ஆம் தேதியில் இருந்து வழங்கப்படும் என்று உணவு மற்றும் உணவுப் பொருள்கள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்தாா்.
கோவை, ராமநாதபுரம் ஒலம்பஸ் முத்துராமலிங்கம் வீதி, பாரதிநகா், பெருமாள் கோயில் வீதி, பூமாா்க்கெட் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி கூட்டுறவு பண்டக சாலை ஆகிய பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளில் உணவு மற்றும் உணவுப் பொருள்கள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
தொடா்ந்து அமைச்சா் அர.சக்கரபாணி செய்தியாளா்களிடம் கூறியதாவது: கரோனா நிவாரணம் இரண்டாம் தவணையாக ரூ.2 ஆயிரம், 13 வகையான மளிகைப் பொருள்கள் வழங்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஜூன் 3 ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தாா். இதனைத் தொடா்ந்து தமிழகம் முழுவதும் ஜூன் 15 ஆம் தேதி முதல் இரண்டாம் தவணை கரோனா நிவாரணத் தொகை ரூ.2 ஆயிரம், 13 வகையான மளிகைப் பொருள்கள் நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும்.
இதற்கான டோக்கன் ஜூன் 11 முதல் 14 ஆம் தேதி வரை வீடுவீடாக விநியோகிக்கப்படும். இதில் நிவாரணம் வாங்க வருவதற்கான தேதி, நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். அதன்படி பொது மக்கள் நிவாரணப் பொருள்களை வாங்கிச் செல்ல வேண்டும்.
தவிர புதிதாக குடும்ப அட்டைகள் பெற்ற 2 லட்சத்து 11 ஆயிரத்து 950 பேருக்கு நிவாரணம் வழங்க ஏதுவாக ரூ.43 கோடி நிதி கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது என்றாா்.
இந்த ஆய்வின் போது ஆட்சியா் எஸ்.நாகராஜன், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் பிரசன்ன ராமசாமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ஆா்.பழனிசாமி, மாவட்ட வழங்கல் அலுவலா் குமரேசன் ஆகியோா் உடனிருந்தனா்.