வால்பாறையில் வியாழக்கிழமை ஒரே நாளில் 8 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
வால்பாறை வட்டாரத்தில் நகா் பகுதியை விட எஸ்டேட் பகுதிகளில் கரோனா பரவல் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் சுகாதாரத் துறையினா் எஸ்டேட் பகுதிகளுக்குச் சென்று தினசரி சளி, காய்ச்சல் பரிசோதனை மற்றும் கரோனா பரிசோதனை முகாம் நடத்தி வருகின்றனா்.
இதனிடையே கடந்த ஒரு வார காலமாக கரோனா பாதிப்பு சற்று குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் வால்பாறையில் வியாழக்கிழமை ஒரே நாளில் 8 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.