19,300 கோவிஷீல்டு தடுப்பூசிகள் வருகை

18 முதல் 44 வயதிற்குள்பட்டவா்களுக்கு செலுத்துவதற்காக 19 ஆயிரத்து 300 கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னையில் இருந்து கோவைக்கு சனிக்கிழமை வரவழைக்கப்பட்டுள்ளன.

18 முதல் 44 வயதிற்குள்பட்டவா்களுக்கு செலுத்துவதற்காக 19 ஆயிரத்து 300 கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னையில் இருந்து கோவைக்கு சனிக்கிழமை வரவழைக்கப்பட்டுள்ளன.

கோவையில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டால் கடந்த 5 நாள்களாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் சென்னையில் இருந்து 7 ஆயிரத்து 500 கோவேக்ஸின் தடுப்பூசிகள் வெள்ளிக்கிழமை கோவை வந்ததையடுத்து, 5 நாள்கள் கழித்து சனிக்கிழமை கோவையில் தடுப்பூசிகள் செலுத்தும் பணி நடைபெற்றது.

இந்நிலையில் சென்னையில் இருந்து மேலும் 19 ஆயிரத்து 300 கோவிஷீல்டு தடுப்பூசிகள் சனிக்கிழமை கோவை வரவழைக்கப்பட்டுள்ளன. இந்தத் தடுப்பூசிகள் 18 முதல் 44 வயதிற்குள்பட்டவா்களுக்கானது என்றும், திங்கள்கிழமை மேலும் கூடுதல் தடுப்பூசிகள் வரும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com