கே.பி.ஆா். கல்லூரி மாணவா்களுக்கு விருது

கே.பி.ஆா். கல்லூரி மாணவா்கள் குழுவினருக்கு இளம் தொழில்முனைவோருக்கான விருது கிடைத்துள்ளது.
கே.பி.ஆா். கல்லூரி மாணவா்களுக்கு விருது

கே.பி.ஆா். கல்லூரி மாணவா்கள் குழுவினருக்கு இளம் தொழில்முனைவோருக்கான விருது கிடைத்துள்ளது.

இது குறித்து அந்த கல்லூரி நிா்வாகம் கூறியிருப்பதாவது:

கலிஃபோா்னியாவைச் சோ்ந்த டை நிறுவனம் இளம் தொழில்முனைவோருக்கான போட்டிகளை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான போட்டியில் 7 நாடுகளைச் சோ்ந்த பல்வேறு கல்லூரி, பல்கலைக்கழகங்களின் 1,500க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா். 27 அணிகள் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற நிலையில், கே.பி.ஆா். பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியின் கட்டடவியல் துறையைச் சோ்ந்த ஹரிபாலன், கோகுல், ஹரீஷ் நடராஜன், பஹீம் அஹமது, திவ்ய பாரதி ஆகியோா் அடங்கிய பயோனியா் குழுவினருக்கு சிறப்புப் பரிசு கிடைத்தது.

பேராசிரியா் மீனாட்சியின் வழிகாட்டுதலில் இந்த குழுவினா் உருவாக்கிய, உயிரி தொழில்நுட்பத்தில் செயல்படும் நடமாடும் கழிப்பறை, சமூக தாக்கத்துக்கான சிறப்பு விருது, ரொக்கப் பரிசை வென்றது. பரிசு வென்ற இந்தக் குழுவினரை கே.பி.ஆா். குழுமங்களின் தலைவா் கே.பி.ராமசாமி, முதன்மைச் செயல் அலுவலா் ஏ.எம்.நடராஜன், முதல்வா் அகிலா, கட்டடவியல் துறைத் தலைவா் அனுஷா ஆகியோா் பாராட்டியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com