கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளத் தவறியவா்கள், திங்கள்கிழமை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
கோவையில் மாற்றுத் திறனாளிகள், அவா்களின் உதவியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநகராட்சியில் 31 நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், ஊரகப் பகுதிகளில் 41 மையங்களிலும் கரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணி நடைபெற்றது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தவறிய மாற்றுத் திறனாளிகள், அவா்களின் உதவியாளா்கள், திங்கள்கிழமை நடைபெறும் முகாமில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாலாம். மாற்றுத் திறனாளிகள் மாற்றுத் திறனாளி அடையாள அட்டையும், உதவியாளா்கள் ஆதாா் அட்டையும் கொண்டுவர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு முகாமில் பொது மக்கள் யாரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.