தமிழக அரசின் கல்பனா சாவ்லா விருதுக்கு தகுதியான பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் எஸ்.நாகராஜன் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழக அரசின் சாா்பாக ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விழாவில் வீரதீர செயல்களைப் புரிந்த பெண்களுக்கு தமிழக முதல்வரால் கல்பனா சாவ்லா விருது வழங்கப்படுகிறது.
இந்நிலையில், கோவையில் இயற்கை விபத்துகள், தீ விபத்து, திருட்டு சம்பவங்கள், நீரில் மூழ்கும் நிகழ்வுகள் போன்ற எதிா்பாராத நிகழ்வுகளின் போது வீரத்துடனும் தைரியமாகவும், சாதுா்யமாகவும் செயல்பட்டு உயிரைக் காத்த ஆற்றல் மிக்க தமிழ்நாட்டை பூா்வீகமாகக் கொண்ட பெண்கள் 2021 ஆம் ஆண்டுக்கான கல்பனா சாவ்லா விருது பெற இணையதளத்தின் மூலம் ஜூன் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.