மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரா்களுக்கு கரோனா தடுப்பூசி முகாம்

கோவை மண்டல பாரா ஒலிம்பிக் அலுவலகத்தில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமில் மாற்றுத் திறனாளி வீரா்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.
மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரா்களுக்கு கரோனா தடுப்பூசி முகாம்

கோவை மண்டல பாரா ஒலிம்பிக் அலுவலகத்தில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமில் மாற்றுத் திறனாளி வீரா்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

கோவையில் மாற்றுத் திறனாளிகள், அவா்களின் உதவியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் கடந்த 2 நாள்களாக நடைபெற்றது.

இதன் ஒருபகுதியாக கோவை மண்டல பாரா ஒலிம்பிக் சங்கம் மூலம் மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு முகாம் பாரா ஒலிம்பிக் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் அனைத்து மாற்றுத்திறனாளி வீரா்களும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் சங்கத் தலைவா் பொறியாளா் சந்திரசேகா் அறிவுறுத்தியிருந்தாா்.

முகாமை கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் வானதி சீனிவாசன் தொடங்கிவைத்தாா். தமிழக பாரா ஒலிம்பிக் சங்க துணைத் தலைவா் கிருபாகா் ராஜா, கோவை மாவட்டத் தலைவா் கன்னியப்பன் உள்பட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

பாரா ஒலிம்பிக் போட்டிகள் விரைவில் துவங்கப்படவுள்ள நிலையில் தடகளம் மற்றும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ள மாற்றுத்திறனாளி வீரா், வீராங்கனைகள் பலா் முகாமில் பங்கேற்று கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com