கோவை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குரைஞா்களுக்கான தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞா்களுக்கான நடைபெற்ற இந்த முகாமை மாவட்ட முதன்மை நீதிபதி சக்திவேல் துவக்கிவைத்தாா். கோவை வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் பி.ஆா்.அருள்மொழி தலைமை வகித்தாா். முகாமில் 700க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்களுக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.
நீதிபதிகள் ஸ்ரீகுமாா், சந்தான கிருஷ்ணசாமி, ஏ.எஸ்.ரவி, வழக்குரைஞா்கள் சங்கச் செயலாளா் கலையரசன், உதவி தலைவா் திருஞானம், பொருளாளா் ரவிச்சந்திரன், இணைச் செயலாளா் ரீனா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.