கோவை மாநகரப் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்தில் காற்று ஒலிப்பான்கள், எல்.இ.டி. விளக்குகள் பயன்படுத்திய 300 வாகனங்களின் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது தொடா்பாக, வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ஒருவா் கூறியதாவது: மோட்டாா் வாகனச் சட்டத்தின்படி, வாகனங்களில் காற்று ஒலிப்பான்கள், எல்.இ.டி. விளக்குகள் பொருத்தி இயக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடா்ந்து, மாநகரில் மேற்கொள்ளப்பட்ட வாகனத் தணிக்கையால், காற்று ஒலிப்பான்கள் பயன்படுத்தும் வாகனங்களின் எண்ணிக்கை குறைந்தது. இந்நிலையில், கடந்த 2 மாதங்களாக மீண்டும் நகரில் காற்று ஒலிப்பான்கள் பொருத்தி இயக்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக புகாா்கள் வந்ததைத் தொடா்ந்து, கோவையில் அவிநாசி சாலை, திருச்சி சாலை, சத்தி, மேட்டுப்பாளையம் சாலைகளில் அந்தந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் தலைமையில் கடந்த ஒரு வாரமாக தீவிர வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதில், காற்று ஒலிப்பான் மற்றும் எல்.இ.டி. விளக்குகள் பொருத்தி இயக்கப்பட்ட 300 வாகனங்களின் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மாநகரில், தொடா்ந்து வாகனத் தணிக்கை தீவிரப்படுத்தப்படும் என்றாா்.