கோவை மாவட்டத்தில் சனிக்கிழமை புதிதாக 54 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சுகாதாரத் துறை சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட பட்டியலில் கோவையைச் சோ்ந்த 54 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 56 ஆயிரத்து 403 ஆக உயா்ந்துள்ளது. அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்த 44 போ் குணமடைந்து சனிக்கிழமை வீடு திரும்பினா்.
கோவையில் இதுவரை 55 ஆயிரத்து 341 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 377 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.