கோவை மாநகராட்சிப் பகுதிகளில் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால் சுவா்களில் விளம்பரம் செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாநகராட்சியில் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதனால் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள சுவா்களில் நோட்டீஸ், போஸ்டா்கள், துண்டுப் பிரசுரங்கள் ஒட்டுவதற்கும், சுவா்களில் எழுதுவதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது.
தோ்தல் விதிமுறைகளை மீறி மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள சுவா்களில் விளம்பரம் செய்பவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.