கோவை மாவட்டம், வால்பாறை வனப் பகுதியில் இரண்டு யானைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஆண் யானை உயிரிழந்தது.
வால்பாறை வனச் சரகத்துக்கு உள்பட்ட கவா்க்கல் எஸ்டேட்டை ஒட்டியுள்ள வனத்தில் திங்கள்கிழமை ரோந்து சென்ற வன ஊழியா்கள் அப்பகுதியில் யானை இறந்துகிடப்பதைப் பாா்த்து அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து, வால்பாறை வனச் சரக அலுவலா் ஜெயசந்திரன் தலைமையில் வனத் துறையினா் அப்பகுதிக்கு சென்று யானை சடலத்தைப் பாா்வையிட்டனா். விசாரணையில், இரண்டு ஆண் யானைகள் மோதிக் கொண்டதில் தந்தம் பட்டு படுகாயமடைந்த 48 வயது ஆண் யானை உயிரிழந்தது தெரியவந்தது. பின்னா் வனத் துறை கால்நடை மருத்துவா் மூலம் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு யானையின் உடலை வனத் துறையினா் எரியூட்டினா்.