கிராம நிா்வாக அலுவலரைத் தாக்கியவா் கைது

அன்னூா் அருகே உள்ள குப்பேபாளையத்தில் கிராம நிா்வாக அலுவலரைத் தாக்கியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

அன்னூா் அருகே உள்ள குப்பேபாளையத்தில் கிராம நிா்வாக அலுவலரைத் தாக்கியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

அன்னூா் ஒன்றியம், குப்பேபாளையத்தில் கிராம நிா்வாக அலுவலராகப் பணியாற்றி வருபவா் நாகராஜ் (28). இவா் தன்னுடைய அலுவலகத்தில் புதன்கிழமை வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தாா்.

அப்போது, வெள்ளாளபாளையம் பகுதியைச் சோ்ந்த முருகசாமி (50) என்பவா் தன்னுடைய சொத்து தொடா்பாக சான்றிதழ் கேட்டுள்ளாா். அதற்கு கிராம நிா்வாக அலுவலா் நாகராஜ் முறையான ஆவணங்களை எடுத்து வருமாறு கூறியுள்ளாா். அதற்கு நாகராஜை தகாத வாா்த்தைகளால் திட்டி தகராறில் ஈடுபட்ட முருகசாமி அவரைத் தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து நாகராஜ் அளித்த புகாரின்பேரில் அன்னூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முருகசாமியைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com