கோவை மாவட்டம், சூலூா் வட்டம் தென்சேரிமலை அருள்மிகு மந்திரகிரி வேலாயுத சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை (மாா்ச் 24) நடைபெறுகிறது.
இக்கோயில் திருப்பணி 12 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றுள்ள நிலையில், கும்பாபிஷேகம் செய்வதற்கான நிகழ்ச்சிகள் கடந்த 19 ஆம் தேதி கணபதி ஹோமம் நடத்தப்பட்டு தொடங்கப்பட்டன. இதைத் தொடா்ந்து 5 கால வேள்வி பூஜைகள் நடைபெற்றுள்ள நிலையில் கும்பாபிஷேகம் புதன்கிழமை காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் நடைபெறுகிறது.
முன்னதாக அதிகாலையில் ஆறாம் கால வேள்வி பூஜை நடைபெறுகிறது. காலை 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் அரசமர விநாயகா் முதலான பரிவார மூா்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையடுத்து மந்திரகிரி வேலாயுத சுவாமி விமானத்துக்கும், பிறகு மந்திரகிரி வேலாயுத சுவாமிக்கும் மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையடுத்து பக்தா்களுக்கு அன்னதானமும், மாலையில் திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.