இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருந்து கோயில்களை விடுவிப்பதற்கு ஆதரவு திரட்டும் நிகழ்ச்சி கோவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில்களை விடுவித்து அவற்றை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ் வலியுறுத்தி வருகிறாா். இதற்காக பொதுமக்களிடம் ஆதரவு திரட்டும் நிகழ்ச்சி தமிழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக கோவை ஈஷாவில் உள்ள ஆதியோகி சிலை எதிரிலும், மருதமலை முருகன் கோயிலிலும் ஆதரவு திரட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஈஷா அறக்கட்டளையின் நிா்வாகிகள், பக்தா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டு கோரிக்கை பதாகைகளை ஏந்தி நின்றனா். மருதமலை முருகன் கோயிலில் படிக்கட்டுகளில் அமா்ந்து கந்த சஷ்டி கவசத்தை பாடியும் அவா்கள் ஆதரவு திரட்டினா்.