தமிழகத்தை வஞ்சிக்கும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்து ஏன் என்று மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளா் திருமுருகன் காந்தி கேள்வியெழுப்பியுள்ளாா்.
கோவை பத்திரிகையாளா் மன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் அவா் பேசியதாவது:
கோவை மாநகராட்சியில் பொலிவுறுநகர திட்டம், குடிநீா் விநியோகம் தனியாருக்கு தாரை வாா்த்தல் உள்பட பல்வேறு திட்டங்களில் ஊழல் நடைபெற்றுள்ளது. இது குறித்து அமைச்சா் எஸ்.பி.வேலுமணி பேச மறுத்து வருகிறாா். ஜிஎஸ்டியால் கோவையில் 30 சதவீத சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. பல்லாயிரக்கணக்கான தொழிலாளா்கள் வேலையை இழந்துள்ளனா். பாஜக சாா்பில் போட்டியிடும் வானதி சீனிவாசன் கோவையின் மேம்பாட்டுக்கான திட்டங்கள் குறித்து இதுவரை தெரிவிக்கவில்லை.
தமிழகத்தை வஞ்சிக்கும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ள ஏன் என்று தெரியவில்லை. தமிழகத்தில் பாஜக காலூன்றுவதற்கு அதிமுகவினா் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனா் என்றாா்.