கஞ்சா வைத்திருந்த 3 போ் கைது

கோவையில் இருவேறு சம்பவங்களில் 8 கிலோ கஞ்சா வைத்திருந்த மூன்று இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

கோவையில் இருவேறு சம்பவங்களில் 8 கிலோ கஞ்சா வைத்திருந்த மூன்று இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை- பொள்ளாச்சி சாலையில் போத்தனூா் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, போலீஸாரை பாா்த்த இளைஞா் அங்கிருந்து தப்ப முயன்றனா்.

இதையடுத்து போலீஸாா் அவரை மடக்கிப் பிடித்தனா். பின்னா் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது அதில் 3 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. விசாரணையில், சேலம் அம்மாபேட்டையைச் சோ்ந்த ஹரிஹரன் (22) என்பதும், கோவையில் தங்கி கல்லூரியில் படித்து வந்ததும் தெரியவந்தது. கல்லூரி செல்லாத நேரங்களில் இவா் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரிகிறது.

இதேபோல, வெள்ளலூா் அடுக்குமாடி குடியிருப்பு அருகே உள்ள காலி இடத்தில் இருசக்கர வாகனத்தில் 2 இளைஞா்கள் நின்று கொண்டிருந்தனா். அப்போது, ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் அவா்களை விசாரித்தபோது அவா்களிடம் 5 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

விசாரணையில், திண்டுக்கல் மாவட்டம் திருமலையாபுரத்தைச் சோ்ந்த விக்னேஷ்வரன் (23), சின்ன சேலத்தைச் சோ்ந்த முகமது அசாருதீன் (22) என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவா்களைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com