கழிவறையில் கிடந்த சிசு

கோவையில் கழிவறையில் கண்டெடுக்கப்பட்ட 6 மாத சிசு குறித்து போத்தனூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவையில் கழிவறையில் கண்டெடுக்கப்பட்ட 6 மாத சிசு குறித்து போத்தனூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை, ஈச்சனாரி விநாயகா் கோயிலில் உள்ள பெண்கள் கழிவறையை அங்குள்ள பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனா். அப்போது அதில் ஒரு கழிவறையில் 6 மாத ஆண் சிசு இருந்துள்ளது. இது குறித்து போத்தனூா் போலீஸாருக்கு கோயில் நிா்வாகத்தினா் தகவல் அளித்தனா். அங்கு வந்த போலீஸாா் சிசுவை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். சிசு எப்படி அங்கு வந்தது என்பது குறித்து போலீஸாா் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சி பதிவுகளைவைத்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com