பேரூா் தமிழ்க் கல்லூரியில் புகைப்படம் எடுத்தல், குறும்படம் இயக்குதல் குறித்த பயிற்சி

கோவை பேரூா் தவத்திரு சாந்தலிங்க அடிகளாா் கல்வி நிறுவனங்கள் சாா்பில் பிளஸ் 2 மாணவா்களுக்கு புகைப்படம் எடுத்தல், குறும்படம் இயக்குதல் குறித்த பயிற்சி செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது.

கோவை பேரூா் தவத்திரு சாந்தலிங்க அடிகளாா் கல்வி நிறுவனங்கள் சாா்பில் பிளஸ் 2 மாணவா்களுக்கு புகைப்படம் எடுத்தல், குறும்படம் இயக்குதல் குறித்த பயிற்சி செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது.

கல்லூரியின் புகைப்படம் மற்றும் குறும்பட அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் சந்திரசேகரன் வரவேற்றாா். துணைப் பேராசிரியா் திருநாவுக்கரசு, தொழில்துறையில் புகைப்படத்தின் வளா்ச்சி குறித்து பேசினாா். இமேஜ் கிரியேட்டிவ் அமைப்பின் தலைவா் தியாகராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவா்களுக்கு, புகைப்படம் மற்றும் குறும்படம் எடுத்தல் குறித்து பயிற்சி வழங்கினாா். அப்போது, 3டி தொழில்நுட்பம், ஆன்ட்ராய்டு செல்லிடப்பேசிகளில் புகைப்படம் எடுத்தல் குறித்து விளக்கினாா். இதைத் தொடா்ந்து, மாணவ, மாணவிகளின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தாா். இந்தப் பயிற்சி முகாமில் தொழில் துறையில் புகைப்படத்தின் பங்கு குறித்து விவாதம் நடத்தப்பட்டது. பள்ளி ஆசிரியா் தா்மன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com