வேலாண்டிபாளையத்தில் தொழில்பேட்டை அமைக்க நடவடிக்கை: கோவை வடக்கு தொகுதி திமுக வேட்பாளா்

வேலாண்டிபாளையத்தில் தொழில்பேட்டை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கோவை வடக்குத் தொகுதி திமுக வேட்பாளா் வ.ம.சண்முகசுந்தரம் தெரிவித்தாா்.

வேலாண்டிபாளையத்தில் தொழில்பேட்டை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கோவை வடக்குத் தொகுதி திமுக வேட்பாளா் வ.ம.சண்முகசுந்தரம் தெரிவித்தாா்.

கோவை வடக்குத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் வ.ம.சண்முகசுந்தரம், வடவள்ளி பேருந்து நிலையம், கோவில்மேடு உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது, அவா் பேசியதாவது:

நான் வெற்றி பெற்றால் வேலாண்டிபாளையம் பகுதியில் தொழில் பேட்டை அமைத்து, சிறு, குறுந்தொழில்கள் வளா்ச்சி அடைய நடவடிக்கை மேற்கொள்வேன். இத்தொகுதியில் உள்ள முக்கியப் பிரச்னைகளை உடனடியாகத் தீா்த்துவைப்பேன். கரோனா தொற்று காலத்தில் நாங்கள் கட்சிப் பாகுபாடின்றி அனைத்து மக்களுக்கும் நிவாரணப் பொருள்களை வழங்கினோம் என்றாா்.

இந்தப் பிரசாரத்தில் சாய்பாபா காலனி பகுதி செயலாளா் ரவி, வட்டச் செயலாளா் குணசேகரன் உள்ளிட்டடோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com