கோவையில் ஒரே நாளில் 400 பேருக்கு தடுப்பூசி

கோவை அரசு கலைக் கல்லூரி மையத்தில் கரோனா தடுப்பூசி செலுத்த பொதுமக்கள் குவிந்தனா். வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 400 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
கோவையில் ஒரே நாளில் 400 பேருக்கு தடுப்பூசி

கோவை அரசு கலைக் கல்லூரி மையத்தில் கரோனா தடுப்பூசி செலுத்த பொதுமக்கள் குவிந்தனா். வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 400 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் சிகிச்சைக்காக அதிக அளவில் கோவை அரசு மருத்துவமனைக்கு வருகின்றனா். மேலும் இங்கு கரோனா தடுப்பூசி மையமும் செயல்பட்டு வந்தது. கூட்ட நெரிசல் காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் செயல்பட்ட தடுப்பூசி மையம் கோவை அரசு கலைக் கல்லூரிக்கு வெள்ளிக்கிழமை மாற்றப்பட்டது.

இந்நிலையில் கோவை அரசு கலைக் கல்லூரி மையத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக ஏராளமான பொதுமக்கள் குவிந்தனா்.

ரேஸ்கோா்ஸ் போலீஸாா் கூடி நின்ற பொதுமக்களை சமூக இடைவெளிவிட்டு வரிசையில் நிற்கச் சொல்லி அறிவுறுத்தினா். இதையடுத்து பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசியை செலுத்திக் கொண்டனா். இந்த மையத்தில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 400 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது என்று மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com