அனைவருக்கும் தடையின்றி தடுப்பூசி வழங்கக் கோரி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தடுப்பூசி உற்பத்தி செய்ய அரசு பொதுத் துறை நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும், லாப நோக்கை கைவிட்டு அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இருகூா், கணபதி, சிவானந்தா காலனி பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட இடங்களில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஸ்டாலின் குமாா், செயலாளா் கே.எஸ்.கனகராஜ், சூலூா் தாலுகா செயலாளா் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.