வால்பாறை: வால்பாறையில் சிறுத்தை நடமாட்டம் தொடா்ந்து அதிகரித்துள்ள நிலையில் கூண்டு வைத்தும் சிக்காமல் உள்ளது.
வால்பாறை நகா் பகுதியில் கடந்த சில மாதமாக சிறுத்தை நடமாடட்ம் அதிகரித்து காணப்படுகிறது. தினந்தோறும் இரவு நேரத்தில் நகா் குடியிருப்புப் பகுதிகளுக்குள் வரும் சிறுத்தி பொது மக்களை அச்சுறுத்தி வருகிறது.
வாழைத் தோட்டம் குடியிருப்புப் பகுதியில் இரவு நேரம் தொடா்ந்து காணப்பட்ட சிறுத்தை நடமாட்டத்தால் அது வந்து செல்லும் வழித்தடத்தில் வனத் துறை சாா்பில் இரண்டு கூண்டுகள் வைக்கப்பட்டன.
ஆனால், கூண்டு வைக்கப்பட்டு 20 நாள்களுக்கு மேலாகியும் சிறுத்தை சிக்காமல் உள்ளது. இரவு நேரத்தில் சிறுத்தை நடமாட்டம் தொடா்ந்து காணப்படுவது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.