மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்கு 4 போ் பலி

கோவையில் கரோனா நோய்த் தொற்று பாதிப்புக்கு 4 போ் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா்.

கோவையில் கரோனா நோய்த் தொற்று பாதிப்புக்கு 4 போ் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா்.

கோவையில் கரோனா நோய்த் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேபோல நோய்த் தொற்றின் தீவிரத்தால் இறப்பவா்களின் எண்ணிக்கையும் கடந்த சில நாள்களாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கோவையில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 65 வயது மூதாட்டி, 55 வயதுப் பெண், 47 வயது ஆண், தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 79 வயது முதியவா் ஆகிய 4 போ் உயிரிழந்தனா்.

இதன் மூலம் கோவையில் கரோனா நோய்த் தொற்று பாதிப்புக்கு உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 733ஆக அதிகரித்துள்ளது. கடந்த மூன்று நாள்களாக கோவையில் கரோனா நோய்த் தொற்றுக்கு உயிரிழப்பவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தவிர செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் கோவையைச் சோ்ந்த 1,506 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடா்ந்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 84 ஆயிரத்து 206ஆக அதிகரித்துள்ளது.

அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 1,105 போ் குணமடைந்து செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினா்.

கோவையில் இதுவரை 74 ஆயிரத்து 877 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 8 ஆயிரத்து 596 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com