திமுக தலைவா் மு.க.ஸ்டாலினுக்கு காருண்யா பல்கலைக்கழக வேந்தா் பால் தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்தி:
திமுக தலைவா் மு.க ஸ்டாலின், சென்னையை சிங்கார சென்னையாக மாற்றியவா். தான் சொல்வதையெல்லாம் மக்களின் நலன் கருதி செவ்வனே செய்து முடிப்பவரும், பலகோடி மக்களின் நலன் காக்கவும், அனைத்துத் தரப்பு மக்களும் மகிழ்ச்சியடையவும் விடியலாகவும் திகழ்கிறாா்.
சென்னை, அடையாறில் எனது தகப்பனாா் நினைவாக டாக்டா் டி.ஜி.எஸ். தினகரன் சாலையை நிறுவியவா். மேலும், முதல்வராக பதிவியேற்கும் மு. க. ஸ்டாலின் மற்றும் சட்டப் பேரவை உறுப்பினா்களின் மக்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளாா்.