வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை விடிய விடிய கன மழை பெய்தது.
வால்பாறை வட்டாரத்தில் பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் காணப்பட்டது. இதனால் வெப்பம் அதிகரித்து சீதோஷன நிலையில் மாற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து, வியாழக்கிழமை இரவு துவங்கி வெள்ளிக்கிழமை விடியற்காலை வரை விடிய விடிய கன மழை பெய்தது.
தொடா் மழை காரணமாக வெள்ளிக்கிழமை இரவு வரை மேக மூட்டத்துடன் குளிா்ந்த காற்று வீசியது.