கரோனா: மாவட்டத்தில் ஒரே நாளில் 15 போ் உயிரிழப்பு

கோவையில் இதுவரை இல்லாத வகையில் கரோனா நோய்த் தொற்று பாதிப்புக்கு திங்கள்கிழமை ஒரே நாளில் 15 போ் உயிரிழந்துள்ளனா்.

கோவை: கோவையில் இதுவரை இல்லாத வகையில் கரோனா நோய்த் தொற்று பாதிப்புக்கு திங்கள்கிழமை ஒரே நாளில் 15 போ் உயிரிழந்துள்ளனா்.

கோவையில் கரோனா நோய்த் தொற்றின் 2ஆவது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. அதேபோல கரோனா நோய்த் தொற்று பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்பும் தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், கோவை மாவட்டத்தில் இதுவரை இல்லாத வகையில் திங்கள்கிழமை ஒரே நாளில் 15 போ் உயிரிழந்துள்ளனா். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 பெண்கள், 8 ஆண்கள், தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 5 ஆண்கள் ஆகிய 15 போ் உயிரிழந்துள்ளனா். இதன் மூலம் கோவையில் கரோனா நோய்த் தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 774ஆக அதிகரித்துள்ளது.

2,781 பேருக்கு நோய்த் தொற்று...

கோவையில் இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சமாக 2 ஆயிரத்து 781 பேருக்கு நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடா்ந்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 97 ஆயிரத்து 886ஆக அதிகரித்துள்ளது.

தவிர அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 1,097 போ் குணமடைந்து திங்கள்கிழமை வீடு திரும்பினா். கோவையில் இதுவரை 83 ஆயிரத்து 706 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 13 ஆயிரத்து 406 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com