வால்பாறை: கரோனா பாதிப்புக்கு முதியவா் ஒருவா் உயிரிழந்ததையடுத்து, அவா் வசித்து வந்த முருகன் எஸ்டேட் பகுதியில் சுகாதாரத் துறை சாா்பில் காய்ச்சல் பரிசோனை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
வால்பாறை நகா் பகுதியை விட எஸ்டேட் பகுதிகளில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் எஸ்டேட் பகுதியிலேயே சுகாதாரத் துறையினா் தொடா்ந்து முகாமிட்டு பரிசோதனை முகாம் நடத்தி வருகின்றனா். வால்பாறையை அடுத்த முருகன் எஸ்டேட்டை பகுதியைச் சோ்ந்த 78 வயது முதியவா் ஒருவருக்கு கரோனாவால் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதனையடுத்து, வால்பாறை சுகாதார நிலையம் வட்டார மருத்துவ அலுவலா் பாபு லஷ்மணன் தலைமையில் சுகாதாரத் துறையினா் முருகன் எஸ்டேட் பகுதியில் முகாம் நடத்தி நூற்றுக்கணக்கானோருக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொண்டனா்.