வால்பாறை அரசு மருத்துவமனைக்கு சொந்த செலவில் வென்டிலேட்டா் வசதியுடன் ஆம்புலன்ஸ்

வால்பாறையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சொந்த செலவில் 15 நாள்களுக்குள் வென்டிலேட்டா் வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் வழங்கப்படும் என்று வால்பாறை எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி உறுதியளித்தாா்.
வால்பாறை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட டி.கே. அமுல் கந்தசாமி எம்.எல்.ஏ.
வால்பாறை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட டி.கே. அமுல் கந்தசாமி எம்.எல்.ஏ.

வால்பாறையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சொந்த செலவில் 15 நாள்களுக்குள் வென்டிலேட்டா் வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் வழங்கப்படும் என்று வால்பாறை எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி உறுதியளித்தாா்.

கோவையில் அமைச்சா்கள் கா. ராமசந்திரன், அர.சக்கரபாணி ஆகியோா் தலைமையில் அண்மையில் கரோனா தடுப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, கோவை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த மனுவை முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி வழங்கினாா்.

இதனைத் தொடா்ந்து, வால்பாறை சட்டப் பேரவை உறுப்பினா் டி.கே. அமுல் கந்தசாமி வால்பாறை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, மருத்துவமனைக்குத் தேவைப்படும் மருத்துவ உபகரணங்கள், ஊழியா்கள் பற்றாக்குறை குறித்து கேட்டறிந்து மாவட்ட நிா்வாகம் மூலம் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினாா்.

மேலும், 15 நாள்களுக்குள் தனது சொந்த செலவில் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு வென்டிலேட்டா் வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் வழங்கப்படும் என்று மருத்துவமனை தலைமை மருத்துவா் மகேஷ் ஆனந்தியிடம் உறுதியளித்தாா்.

வால்பாறை அதிமுக தொழிற்சங்கத் தலைவா் வால்பாறை அமீது, அதிமுக நகரச் செயலாளா் மயில்கணேசன் ஆகியோா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com