கோவை: கோவை மாநகரக் காவல் ஆணையராக தீபக் எம்.தாமோா் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
கோவை மாநகரக் காவல் ஆணையராகப் பணியாற்றி வந்த சுமித் சரண், தமிழக சட்டப் பேரவைத் தோ்தலின்போது, அப்போதைய ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக புகாா் எழுந்ததையடுத்து அவா் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். அவருக்கு பதிலாக, ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீா்வாதம் புதிய காவல் ஆணையராக நியமிக்கப்பட்டாா்.
தோ்தல் முடிவுகளுக்குப் பின் புதிய அரசு பொறுப்பேற்றதைத் தொடா்ந்து, காவல் ஆணையராக இருந்த ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீா்வாதம் உளவுத் துறை ஏடிஜிபியாக மாறுதல் செய்யப்பட்டாா். இதனையடுத்து, கோவை மாநகர காவல் ஆணையா் பொறுப்பை மேற்கு மண்டல காவல் துறைத் தலைவா் அமல்ராஜ் கூடுதலாக கவனித்து வந்தாா்.
இந்நிலையில், புதிய காவல் ஆணையராக நியமிக்கப்பட்ட தீபக் எம்.தாமோா் திங்கள்கிழமை பொறுப்பேற்று கொண்டாா். முன்னதாக இவா் திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. ஆக பணிபுரிந்து வந்தாா். மேலும், கடந்த 2016-17 ஆண்டில் கோவை சரக டிஜஜி ஆகவும் பணிபுரிந்துள்ளாா். புதிய காவல் ஆணையா் தீபக் எம்.தாமோருக்கு, துணைக் காவல் ஆணையா்கள் மற்றும் உதவி ஆணையா்கள் நேரில் வாழ்த்து தெரிவித்தனா்.