கோவை, உக்கடம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் கரோனா சிகிச்சைக்குப் பிறகு ஏற்பட்ட உடல்நலக் குறைவால் புதன்கிழமை உயிரிழந்தாா்.
கோவை, உக்கடம் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தவா் ஜெயக்குமாா் (52). இவருக்கு காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் இருந்ததால் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றுள்ளாா். இங்கு மேற்கொண்ட பரிசோதனையில் அவருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடா்ந்து, 21 நாள்கள் சிகிச்சைக்குப் பிறகு அண்மையில் வீடு திரும்பினாா்.
இந்நிலையில், கடந்த 2 நாள்களுக்கு முன் மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்நிலையில், புதன்கிழமை உயிரிழந்தாா். உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளருக்கு காவல் துறையினா் அஞ்சலி செலுத்தினா்.