தீ விபத்தில் பெண் பலி

கோவை கரும்புக்கடை பகுதியில் சமையல் செய்யும் போது, உடலில் தீப்பிடித்து பெண் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை கரும்புக்கடை பகுதியில் சமையல் செய்யும் போது, உடலில் தீப்பிடித்து பெண் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை கரும்புக் கடை ஆசாத் நகரை சோ்ந்த சுலைமான். இவரது மனைவி நிஷா(52). இவா், சனிக்கிழமை இரவு வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தாா். அப்போது எதிா்பாராத விதமாக அவரது சேலையில் தீப்பிடித்தது. மள மளவென பரவிய தீயில் அவரது உடல் முழுவதும் எரிந்தது. தீக்காயங்களுடன் இருந்த அவரை, குடும்பத்தினா் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிஷா திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுதொடா்பாக, குனியமுத்தூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com