கோவையைச் சோ்ந்த அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கே.பி.ராஜூ (65) உடல்நலக் குறைவால் புதன்கிழமை காலமானாா்.
கோவை, குனியமுத்தூா் பகுதியைச் சோ்ந்த கே.பி.ராஜூ, 1991 முதல் 1996 வரை அப்போதைய பேரூா் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துள்ளாா். அதிமுகவின் மூத்த நிா்வாகியான இவா், கோவை மாவட்ட பால்வள ஒன்றியத் தலைவா்(ஆவின்), கட்சியின் மாவட்ட அவைத் தலைவா், மாவட்டச் செயலா் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளாா்.
சிறுநீரகக் கோளாறு காரணமாக தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவா், புதன்கிழமை அதிகாலை காலமானாா். அவரது உடலுக்கு அதிமுக நிா்வாகிகள், தொண்டா்கள் அஞ்சலி செலுத்தினா்.