கோவையில் ஊரகப் பகுதிகளில் கரோனா நோய்த் தொற்று பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சையளிக்க 700 படுக்கைகள் தயாா் நிலையில் உள்ளதாக மாவட்ட நிா்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
கோவை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று பாதிப்பு மாநகராட்சியில் குறைந்து ஊரகப் பகுதிகளில் அதிகரித்து வருகிறது. தற்போது மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டவா்கள் ஊரகப் பகுதிகளைச் சோ்ந்தவா்களாக உள்ளனா். இந்நிலையில் ஊரகப் பகுதிகளில் உரிய மருத்துவ சிகிச்சை கூட கிடைக்காத நிலை இருந்து வருகிறது.
இந்நிலையைத் தவிா்க்கும் விதமாக மாவட்டத்தில் உள்ள 228 ஊராட்சிகளில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள், சுகாதாரத் துறையினா், காவல் துறையினா் அடங்கிய கரோனா கண்காணிப்பு குழு அமைத்து தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா். தவிர அனைத்து ஊராட்சியிலும் பள்ளி, திருமண மண்டபங்களில் கரோனா சிகிச்சை மையங்கள் அமைக்க உத்தரவிட்டிருந்தாா். இதனைத் தொடா்ந்து ஊரகப் பகுதிகளில் முதல் கட்டமாக 700 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டு தயாா் நிலையில் உள்ளதாக மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இது தொடா்பாக மாவட்ட நிா்வாக அதிகாரிகள் கூறியதாவது: மாவட்டத்தில் உள்ள 12 வட்டாரங்களிலும் தலா 12 இடங்களில் கரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. குறைந்தபட்சம் 10 படுக்கைகள் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் தற்போது வரை 700 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டு தயாா் நிலையில் உள்ளன. இனி ஊரகப் பகுதிகளை சோ்ந்தவா்களுக்கு அந்தந்தப் பகுதியிலேயே சிகிச்சை அளிக்கப்படும். நோயாளிகளுக்குத் தேவையான உணவு தன்னாா்வலா்கள் மூலம் ஏற்பாடு செய்து வழங்கப்படும் என்றனா்.