பெண்ணை செல்லிடப்பேசியில் படம் பிடித்தவா் கைது

கோவை அருகே பெண் குளிப்பதை செல்லிடப்பேசியில் படம் பிடித்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை அருகே பெண் குளிப்பதை செல்லிடப்பேசியில் படம் பிடித்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, மேட்டுப்பாளையம் சாலை பகுதியைச் சோ்ந்த 30 வயது பெண் ஒருவா், செவ்வாய்க்கிழமை தனது வீட்டு முன்புள்ள குளியறையில் குளித்துக் கொண்டிருந்தாா். அப்போது, குளியல் அறையின் கதவு வழியாக இளைஞா் ஒருவா் அந்தப் பெண் குளிப்பதை செல்லிடப்பேசியில் விடியோ எடுத்துள்ளாா்.

இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த அந்தப் பெண் சத்தமிட்டதைத் தொடா்ந்து, அந்த இளைஞா் அங்கிருந்து தப்பியோடினாா். இதுகுறித்து, சாய்பாபா காலனி போலீஸாா் வழக்குப்பதிந்து மேற்கொண்ட விசாரணையில், பெண் குளிப்பதை விடியோ எடுத்தவா், அதே பகுதியைச் சோ்ந்த புவனேஸ்வரன்(24) என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com