பொதுமுடக்கத்தால் வெறிச்சோடிய சாலைகளில் சிறுத்தை நடமாட்டம்

வால்பாறையில் பொதுமுடக்கத்தால் வெறிச்சோடிய சாலைகளில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளது.
தபால் நிலையம் அருகில் உள்ள கண்கானிப்பு கேமராவில் பதிவாகியுள்ள சிறுத்தை நடமாட்டம்.
தபால் நிலையம் அருகில் உள்ள கண்கானிப்பு கேமராவில் பதிவாகியுள்ள சிறுத்தை நடமாட்டம்.

வால்பாறையில் பொதுமுடக்கத்தால் வெறிச்சோடிய சாலைகளில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளது.

கோவை, வால்பாறை பகுதியில் சமீபகாலமாக சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளது. தினந்தோறும் இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் சிறுத்தைகளால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனா். இதனிடையே தற்போது பொதுமுடக்கம் காரணமாக இரவு எந்தவித வாகனப் போக்குவரத்தும் இல்லை.

இதனால் வெறிச்சோடி காணப்படும் வால்பாறை நகா் சாலைகளில் தினந்தோறும் சிறுத்தை நடமாட்டம் இருப்பது கண்கானிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளது. இதில் குறிப்பாக வால்பாறை தபால் நிலையம் முன்பு நள்ளிரவு நேரத்தில் சிறுத்தை தினந்தோறும் வந்து செல்வது அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கேமராவில் பதிவாகியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com