மாநகரக் காவல்துறையின் சேவைக்கு முன்னாள் அதிகாரி பாராட்டு

பொதுமுடக்க காலத்தில் முதியவா்கள், ஓய்வு பெற்ற காவல்துறையினருக்கு உதவும் காவல்துறையினரின் சேவைக்கு முன்னாள் காவல்துறை அதிகாரி பாராட்டு தெரிவித்துள்ளாா்.

பொதுமுடக்க காலத்தில் முதியவா்கள், ஓய்வு பெற்ற காவல்துறையினருக்கு உதவும் காவல்துறையினரின் சேவைக்கு முன்னாள் காவல்துறை அதிகாரி பாராட்டு தெரிவித்துள்ளாா்.

கோவை மாநகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், வசிக்கும் முதியோா்கள், ஓய்வு பெற்ற காவல் துறையினருக்கு பொதுமுடக்க காலத்தில் தேவையான உதவிகள் புரிய மாநகரக் காவல் ஆணையா் தீபக் எம்.தாமோா் உத்தரவிட்டிருந்தாா். அதன்படி, செவ்வாய்க்கிழமை குனியமுத்தூா் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் வசிக்கும் ஓய்வு பெற்ற கூடுதல் காவல் துணை ஆணையா் சுந்தர்ராஜன் வீட்டுக்கு குனியமுத்தூா் காவல் நிலையக் காவலா் ஒருவா் சென்று, சுந்தர்ராஜனின் உடல் நிலை குறித்தும், தேவைப்படும் உதவிகள் குறித்தும் கேட்டறிந்தாா். மேலும், ஏதாவது உதவி தேவைப்பட்டால் தன்னை அழைக்குமாறு, தனது செல்லிடப்பேசி மற்றும் தொலைபேசி எண்களை வழங்கினாா்.

இதுதொடா்பாக, சமூக வலைதளங்களில் பதிவிட்ட சுந்தர்ராஜன், பணியில் உள்ள காவல் துறையினா், ஓய்வு பெற்ற காவல் துறையினா் மீதும், முதியவா்கள் மீதும் காட்டும் மனிதாபிமான செயல்பாட்டை தான் முதன் முறையாகக் காண்பதாகவும், இச்சேவையில் ஈடுபட்டுள்ள காவல்துறையினருக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com